கொரோனா புகட்டும் பாடம் என்ன

டோக்கியோ: கொரோனா தொற்று நோய் சுமார் 195 நாடுகளை பாதித்துள்ளது. பல நாடுகள் மக்கள் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க உத்தரவிட்டுள்ளது. பொதுநிகழ்ச்சிகள், மால், திரையரங்கம், அலுவலகம் என பலவற்றுக்கு மக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 6 மாதம் தங்கள் எல்லையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இப்படியாக மக்கள் வெளியே வரக்கூடாது என பல உத்தரவுகளை உலக நாடுகள் பிறப்பித்துள்ள நிலையில், சுமார் 12 கோடிக்கும் மேலான மக்கள் வாழும் நாடாகவும், தொழில்துறையில் சிறந்து விளங்கும் நாடாகவும், அதிக முதியவர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் உள்ள ஜப்பான், மிக சாதாரணமாக இயங்குகிறது. மக்கள் அலுவலகம் செல்கின்றனர், குறிப்பிட்ட சில அலுவலகங்கள் மட்டுமே வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. உணவகங்கள், பார், திரையரங்கம் என அனைத்தும் திறந்திருக்கிறது.